விருதுநகர் அருகே கள்ளச் சாராய ஊறல் அழிப்பு : 3 பேர் கைது

விருதுநகர் அருகே கள்ளச் சாராய ஊறல் அழிப்பு :  3 பேர் கைது
Updated on
1 min read

விருதுநகர் அருகே கள்ளச் சாராயம் காய்ச்சியவர் உட்பட 3 பேரை கைது செய்த போலீஸார், 20 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர்.

விருதுநகர் அண்ணா நகர் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக பாண்டியன் நகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சார்பு ஆய்வாளர் கமல் தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் சோதனையிட்டனர். அங்கிருந்த பாழடைந்த வீடு ஒன்றில் குருவையா மகன் தன்ராஜ் (55) கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸார், 20 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர். அதோடு, சாராயம் வாங்க வந்த ரோசல்பட்டி கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்த மகாலிங்கம் (45), அண்ணா நகரைச் சேர்ந்த ஆரோக்கியசாமி (41) ஆகியோரை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in