Published : 14 Jun 2021 03:13 AM
Last Updated : 14 Jun 2021 03:13 AM
காரைக்குடி அருகே கார் மோதி காவலர் உயிரிழந்தார்.
திருப்பத்தூர் அருகே ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா(33 ). இவர் சாக்கோட்டை காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். நேற்று காலை வேலைக்குச் சென்ற அவர், காரைக்குடி ஆவிடபொய்கை அருகே திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது புதுக்கோட்டையில் இருந்து தேவகோட்டை நோக்கி வந்த கார் பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜா உயிரிழந்தார். கார் ஓட்டுநர் விக்னேஷை குன்றக்குடி போலீஸார் கைது செய்தனர்.
காவலர் ராஜாவுக்கு மனைவி, ஒரு வயது பெண் குழந்தை உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT