Published : 14 Jun 2021 03:13 AM
Last Updated : 14 Jun 2021 03:13 AM

டாஸ்மாக் கடைகள் திறப்பு எஸ்.பி.க்கள் ஆலோசனை :

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங் களில் டாஸ்மாக் கடைகள் திறப்பது தொடர்பாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் இரு மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கரோனா தொற்று இரண்டாம் அலை தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தமிழக அரசு மாநிலத்தில் முழு ஊரடங்கை அறிவித்தது. ஊரடங்கு 4 முறை நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட மிக அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டது.

பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மேலும் சில கடைகள் இயங்கவும் அனுமதி அளிக்கப் பட்டது. அதேநேரம், ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது டாஸ் மாக் கடைகளும் அடைக் கப்பட்டன. இந்நிலையில், இன்று (14-ம் தேதி) முதல் அரசு நிபந்தனைகளை பின்பற்றி டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பது தொடர்பாகவும், அதற்காக மேற்கொள்ள வேண்டிய கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான முன் னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்து தருமபுரி எஸ்பி கலைச் செல்வன் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இக் கூட்டத்தில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கேசவன், கோட்ட ஆய அலுவலர் கலைச்செல்வி, டிஎஸ்பி-க்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி

அதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி தலைமை யில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், டாஸ்மாக் கடைகளில் கரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை போலீஸார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என எஸ்பி வலியுறுத்தினார்.

கூட்டத்தில், ஏடிஎஸ்பி-க்கள் அன்பு, ராஜி, டிஎஸ்பி-க்கள் சரவணன் (கிருஷ்ணகிரி), சங்கர் (மதுவிலக்கு அமல்பிரிவு), முரளி (ஓசூர்) உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x