Published : 14 Jun 2021 03:13 AM
Last Updated : 14 Jun 2021 03:13 AM

நகை, பணம் திருடிய 2 பேர் கைது :

கயத்தாறு அருகே வெள்ளாளன் கோட்டையைச் சேர்ந்த தொழிலாளி மாரியப்பன்(65). இவர், கடந்த 10-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு நாகம்பட்டிக்கு வேலைக்கு சென்றார். இரவு வீடு திரும்பியபோது, முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அவர், வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 4 கிராம் தங்க நகை மற்றும் ரூ.60 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

வெள்ளாளன் கோட்டையை சேர்ந்த மெக்கானிக் இருளப்ப சாமி(30), கூலித்தொரிலாளி மணி(53) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x