Published : 14 Jun 2021 03:13 AM
Last Updated : 14 Jun 2021 03:13 AM
கோவில்பட்டி சுகாதார மாவட்டத் தில் 4 அரசு மருத்துவமனைகள், 24 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இவை அனைத்திலும் கரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது.
கோவில்பட்டி சுகாதார மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் 2,800 டோஸ் கோவிஷீல்டு, 500 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், நேற்று 2,500 டோஸ் கோவிஷீல்டு, 1,100 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதிலிருந்து, கோவில்பட்டி வட்டாரத்துக்கு 800 டோஸ் கோவிஷீல்டும், 700 டோஸ் கோவாக்சினும், கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு 200 டோஸ் கோவிஷீல்டும், 300 டோஸ் கோவாக்சினும் ஒதுக்கப்பட்டது. இதே போல், கயத்தாறு வட்டாரத்துக்கு 500 டோஸ், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் வட்டாரங்களுக்கு தலா 400 டோஸ், புதூர் வட்டாரத்துக்கு 200 டோஸ் கோவிஷீல்டு ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 100 டோஸ் கோவாக்சின் தேவைப்படும் இடங்களுக்கு வழங்க இருப்பு வைக்கப்பட்டு இருந்தது.
2-வது நாளாக நேற்றும் கோவில்பட்டி நகராட்சி, அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். அனைத்து இடங்களிலும் காலை முதலே கூட்டம் காணப்பட்டது. கிராமப்புற மக்களின் வசதிக்காக கிராமங்களிலேயே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT