கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் - கரோனாவுக்கு 19 பேர் உயிரிழப்பு :

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் -  கரோனாவுக்கு 19 பேர் உயிரிழப்பு :
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 349 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரையில் 54,559 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 557பேர் குணமடைந்தனர். இதுவரையில் 49,439 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3,846 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சையில் இருந்தவர்களில் நேற்று 10 பேர் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டத்தில் இதுவரை 661 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 372 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுவரையில் மாவட்டத்தில் 40,038 பேருக்கு தொற்று ஏற்பட் டுள்ளது. நேற்று மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இதுவரை 309 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 231 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.இவர்களைச் சேர்த்து இதுவரையில் 25,584 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட் டத்தில் நேற்று 4 பேர் உயிரிழந்தனர். இதுவரை 176 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in