ஒரேநாளில் 9,900 பேருக்கு தடுப்பூசி :

ஒரேநாளில் 9,900 பேருக்கு தடுப்பூசி :
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 9,900பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என 72 இடங்களில் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சுகாதாரத் துறையின் மூலம் நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறைக்கு தடுப்பூசி வரப்பெற்றன.

தொடர்ந்து நேற்று ஒரே நாளில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 72 மையங்களில் 9,900 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 2,40,975 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, என மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in