Published : 13 Jun 2021 03:13 AM
Last Updated : 13 Jun 2021 03:13 AM

வேதாரண்யம் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு :

நாகை மாவட்டம் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்து ஆட்சியர் பிரவீன் பி.நாயர் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றாளர்களுக்கு தேவை யான ஆக்சிஜன் உள்ளது. குழந்தைகள் நலப்பிரிவை நவீன வசதிகளுடன் சீரமைத்து, சிகிச்சை வசதிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இம்மருத்துவமனை ஐசியூ, ஸ்கேன், ஆபரேஷன் தியேட்டர், எமர்ஜென்சி பிரிவு, லிப்ட், சாய்வு பகுதி உட்பட பல நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும். மருத்துவமனை வளாகத்தில் 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பிரிவுக்கான பணிகள் முடிந்து விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x