Published : 13 Jun 2021 03:14 AM
Last Updated : 13 Jun 2021 03:14 AM

காங்கிரஸ் கட்சியில் இருந்து கார்த்திக் ராஜா நீக்கம் : கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம், தண்டுபத்து கிராமத்தைச் சேர்ந்த டிடிகே.கார்த்திக் ராஜா என்பவர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி அளித்த பரிந்துரையின் அடிப்படையில், தண்டுபத்து கிராமத்தைச் சேர்ந்த டிடிகே.கார்த்திக் ராஜா என்பவர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார். இவருடன் காங்கிரஸ் கட்சியினர் எவரும் எந்த விதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது" என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகையில், “மேற்படி உறுப்பினர் சமூக ஊடகங்களில் காங்கிரஸ் தலைவர்கள் பற்றி தரக்குறைவாக விமர்சித்து தொடர்ந்து பதிவிட்டு வந்ததாலும், அவர் பற்றி வைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் அளித்த புகாரின் பேரிலும் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x