

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்ததால் ஒரே நாளில் தடுப்பூசி இருப்பு காலியானது. தற்போது, கையிருப்பில் குறைந்த எண்ணிக்கை தடுப்பூசி இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கரோனா முதல் அலை பாதிப்பைவிட இரண்டாம் அலையின் பாதிப்பு அதிகமாக இருப்பதுடன் உயிரிழப்பும் அதிகளவில் உள்ளது. குறிப்பாக, தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் முதல் அலையில் ஓராண்டில் எட்டிய எண்ணிக்கையை இரண்டாம் அலையில் இரண்டே மாதங்களில் கரோனா தொற்று எட்டியது. தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்ததால் தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே ஆயுதம் என கூறப்பட்டது.
தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆரம்பத்தில் ஆர்வம் குறைவாக இருந்தாலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் கட்டத் தொடங்கினர். குறிப்பாக, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியதும் பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு அதிகளவில் ஏற்பட்டது. இதனால், தடுப்பூசி கையிருப்பில் தட்டுப்பாடு இருந்தது. தடுப்பூசி விநியோகத்திலும் தட்டுப் பாடு இருந்ததால் தமிழகத்தில் வரப்பெற்ற தடுப்பூசிகளைக் கொண்டு 5 நாட்களுக்குப் பிறகு நேற்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
வேலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை மற்றும் சிறப்பு முகாம்கள் என 23 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நேற்று நடைபெற்றது. கையிருப்பில் இருந்த 3,300 டோஸ் கோவிஷீல்டும், குறைந்த எண்ணிக்கையில் கோவாக்சின் தடுப்பூசியும் போடப்பட்டது. மாலை நிலவரப்படி சுமார் 4,300 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
ஆட்சியர் ஆய்வு
வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கரோனா 3-ம் அலை பரவுவதற்கான வாய்ப்புள்ளது என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். 3-வது அலையிலிருந்து குழந்தைகளை காப்பாற்ற 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வைத்துள்ள பெற்றோர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் அனைவரும் கட்டாயமாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார்.
திருப்பத்தூர் மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம்