Published : 13 Jun 2021 03:14 AM
Last Updated : 13 Jun 2021 03:14 AM

புதிதாக 636 பேருக்கு கரோனா :

வேலூர்/திருப்பத்தூர்/தி.மலை

வேலூர், திருப்பத்தூர் மற்றும் தி.மலை மாவட்டங்களில் 636 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 116 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 45 ஆயிரத்து 111-ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 182 பேருக்கு கரோனா தொற்று உறுதி யானது. சிகிச்சையில் இருந்து நேற்று 338 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,581 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை

தி.மலை மாவட்டத்தில் புதிதாக 338 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,941-ஆக உயர்ந்துள்ளது. 41,526 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 3,895 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x