கடலூர் மாவட்டத்தில் - கரோனாவுக்கு 22 பேர் உயிரிழப்பு :

கடலூர் மாவட்டத்தில் -  கரோனாவுக்கு 22 பேர் உயிரிழப்பு :
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 354 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களைச் சேர்த்து இதுவரையில் இம்மாவட்டத்தில் 54,210 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் சிகிச்சை யில் இருந்தவர்களில் நேற்று 22 பேர் உயிரிழந்தனர். இதுவரை இம்மாவட்டத்தில் 651 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 382பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று புதிதாக 609 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களைச் சேர்த்து இதுவரையில் 39,665பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 609பேர் குணமடைந்தனர். இவர்களைச் சேர்த்து இதுவரையில் 35,544பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3,817பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று 2பேர் உயிரிழந்தனர். இதுவரை 304 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 243 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களைச் சேர்த்து இதுவரையில் 24,353 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று 4 பேர் உயிரிழந்தனர். இதுவரை 172 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in