Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM
: திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்று கட்டுப்படுத்தபட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார். அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் (செய்தித் துறை), கயல்விழி செல்வராஜ் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை), ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறும்போது, "கரோனாவில் இருந்து மக்களை காக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது. இதனால், இந்த பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துகிறோம். அனைவருக்கும் தடுப்பூசிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 37ஆயிரம் என்றிருந்த பாதிப்பு, தற்போது 17 ஆயிரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கோட்டையில் இருந்து உத்தரவு போடாமல், களத்தில் நேரடியாக முதல்வர் பணியாற்றுகிறார். தற்போது நகரங்களைக் கடந்து, கிராமங்களிலும் கரோனா பாதிப்பு இருந்து வருகிறது. விரைவில் கரோனா தொற்று இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும். தடுப்பூசிகளை அதிகம் வழங்க மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT