Published : 11 Jun 2021 03:14 AM
Last Updated : 11 Jun 2021 03:14 AM

மதுரை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி இருப்பில் இல்லை : 2-வது டோஸ் போட வேண்டியவர்கள் கலக்கம்

மதுரையில் தடுப்பூசி இருப்பில் இல்லாததால், இரண்டாது டோஸ் போட வேண்டியவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 3,37,769 பேர் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். தற்போது தடுப்பூசி இருப்பில் இல்லாததால் முதல் டோஸ் போட்டவர்கள், குறிப்பிட்ட நாட்களைக் கடந்தும் இரண்டாவது டோஸ் போட முடியாமல் தவிக்கிறார்கள். தடுப்பூசி மையங்களுக்கு தினமும் சென்று ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். நாட்கள் கடந்து இரண்டாவது தடுப்பூசி போட்டால் அது பலனளிக்குமா? என்ற குழப்பமும் அடைந்துள்ளனர். மதுரை மாவட்ட மருத்துவக் கிடங்கில் ஒரு தடுப்பூசிகூட இருப்பில் இல்லை என்று சுகாதாரத் துறை கைவிரித்துள்ளது. மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் எப்போது தடுப்பூசி வரும் என்பதை உறுதியாகக் கூறவில்லை. மத்திய அரசு விநியோகித்தால் மட்டுமே இனி தடுப்பூசி போடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் தொற்று பரவும் நிலையில் மற்றொரு புறம் தடுப்பூசி போட முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x