Published : 11 Jun 2021 03:14 AM
Last Updated : 11 Jun 2021 03:14 AM

வெளிமாவட்டங்களில் இருந்து இடமாற்றத்தில் வந்த - காவல் ஆய்வாளர்களுக்கு பணி ஒதுக்கீடு : திண்டுக்கல் டி.ஐ.ஜி. விஜயகுமாரி உத்தரவு

வெளிமாவட்டங்களில் இருந்து இடமாற்றத்தில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு வந்த காவல் ஆய்வா ளர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்து திண்டுக்கல் டி.ஐ.ஜி. விஜயகுமாரி உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல் நகர் வடக்கு இன்ஸ்பெக்டராக உலகநாதன், நகர் தெற்கு இன்ஸ்பெக்டராக இளஞ்செழியன், நகர் மேற்கு இன்ஸ்பெக்டராக ராஜசேகர், திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டராக பாஸ்டின்தினகரன், அம்பாத்துரை இன்ஸ்பெக்டராக வெங்கடாச்சலம், வேடசந்தூர் இன்ஸ்பெக்டராக டி.முருகன் ஆகியோரை நியமித்து டி.ஐ.ஜி. விஜயகுமாரி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வடமதுரை- தெய்வம், பழநி தாலுகா- பாலமுருகன், சத்திரப்பட்டி- லட்சுமிபிரபா, கீரனூர்- வீரகாந்தி, நிலக்கோட்டை- ஏ.முருகன், விளாம்பட்டி- வனிதா, பட்டிவீரன்பட்டி- சங்கரேஸ்வரன், ஒட்டன்சத்திரம்- வெங்கடாசலபதி, கன்னிவாடி- தங்கராஜூ, இடையகோட்டை- கோவர்த்தனாம்பிகை, தாண்டிக்குடி- ஏசுராஜசேகரன், செம்பட்டி- செந்தில்குமார், திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையம்- அமுதா, பழநி அனைத்து மகளிர் காவல் நிலையம்- பி.கவிதா, வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையம்- எஸ்.கவிதா, ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையம்- கீதா ஆகியோர் இன்ஸ்பெக்டர்களாக பணி நியமனம் செய்து டி.ஐ.ஜி. விஜயகுமாரி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x