வேளாண் கூட்டுறவு வங்கிகளில் சாகுபடிக்கு கடன் பெற அழைப்பு :

வேளாண் கூட்டுறவு வங்கிகளில் சாகுபடிக்கு கடன் பெற அழைப்பு :
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுக்கொள்ளலாம் என கூட்டுறவு சங்க மாவட்ட இணைப் பதிவாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணை நாளை (ஜூன் 12) திறக்கப்படுகிறது.

இந்நிலையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க் கடனாக ரூ.11 ஆயிரத்து 500 கோடி வழங்கப்பட உள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை அணுகி, பயிர்க்கடன் மற்றும் தேவையான உரங்களைப் பெற்று, விவசாயிகள் பயனடையலாம் என மாவட்ட கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in