Published : 11 Jun 2021 03:15 AM
Last Updated : 11 Jun 2021 03:15 AM

மத்திய அரசைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் :

திருச்சி: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்து எஸ்டிபிஐ சார்பில் பல்வேறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ மாவட்டத் தலைவர் இமாம் ஹசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளர் நியமத்துல்லா, மாவட்டச் செயலாளர் முபாரக் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல, பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் மாவட்டச் செயலாளர் ஷாஜஹான், வி.களத்தூரில் மாவட்ட துணைத்தலைவர் முகமது பாருக், லப்பைக்குடிக்காட்டில் மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் கனி, சத்திரமனையில் மாவட்டப் பொருளாளர் ஜியாவுதீன் அஹமது ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்பகோணம் அருகே ஆவணியாபுரத்தில் ஆடுதுறை கிளை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கிளைத் தலைவர் மன்சூர்அலி தலைமை வகித்தார். எஸ்டிடியு மாநில செயற்குழு உறுப்பினர் எம்ஒய்எஸ். அப்துல் காதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நாகை அபிராமி அம்மன் சன்னதி திடலில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்டிபிஐ நகரச் செயலாளர் மொய்தீன் அப்துல்காதர் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் தமிமுன்அன்சாரி முன்னிலை வகித்தார். நாகை நகர துணைத் தலைவர் அப்துல்ஹமீது நன்றி கூறினார். நாகூர் தர்கா அலங்கார வாசல் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, நாகூர் நகரச் செயலாளர் தவுபிக் தலைமை வகித்தார். நகர துணைத் தலைவர் ரபீக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x