Published : 11 Jun 2021 03:15 AM
Last Updated : 11 Jun 2021 03:15 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் புரந்தரதாஸ் தலைமையிலான அலுவலர்கள் களியக்காவிளை அருகே குழித்துறையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக வந்த ஆட்டோவை, ஜீப்பில் துரத்திச் சென்று கழுவன்திட்டையில் வைத்து பிடித்தனர்.
ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில் ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் 500 கிலோவுக்கு மேல் ரேஷன் அரிசி இருந்தது. கேரளாவுக்கு கடத்திச் செல்வது தெரிய வந்ததையடுத்து அரிசியை பறிமுதல் செய்தனர்.
இதுபோல் கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் மரிய ஸ்டெல்லா தலைமையிலான அதிகாரிகள் வாணியக்குடி பகுதிக்கு சென்ற போது அங்குள்ள தென்னந்தோப்பில் கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டரை டன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். அரசியை கடத்த முயன்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT