Published : 11 Jun 2021 03:15 AM
Last Updated : 11 Jun 2021 03:15 AM

ரயிலில் மது கடத்தியதாக ஒருவர் கைது :

ஆம்பூர்: ஆம்பூர் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் மேகராஜா தலைமையிலான காவல் துறையினர் நேற்று அவ்வழியாக வந்த லால்பாக் விரைவு ரயிலில் சோதனை நடத்தினர். அப்போது, குடியாத்தத்தைச் சேர்ந்த மாரியப்பன் (47) என்பவர் பங்காருபேட்டை யிலிருந்து மதுபான பாட்டில்களை ரயிலில் கடத்தி வருவது தெரிய வந்தது. இதையடுத்து, ஆம்பூர் ரயில்வே பாதுகாப்புப் படையினர் மாரியப்பனை கைது செய்து, அவரிடமிருந்து 46 மதுபான பாட்டில் களை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x