Published : 11 Jun 2021 03:15 AM
Last Updated : 11 Jun 2021 03:15 AM

புதிதாக 669 பேருக்கு கரோனா தொற்று :

வேலூர்/திருப்பத்தூர்/தி.மலை: வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் நேற்று புதிதாக 669 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 158 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 44 ஆயிரத்தை கடந்துள்ளது. 386 பேர் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 1,556 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 207 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 474 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,900 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 19 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இது வரை 429 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 304 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 45,301-ஆக உயர்ந்துள்ளது. 38,583 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 6,216 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓரே நாளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 502-ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x