Published : 10 Jun 2021 03:12 AM
Last Updated : 10 Jun 2021 03:12 AM

சாலையின் குறுக்கே நின்ற யானைகள் : ஒருமணி நேரம் காத்திருந்த தொழிலாளர்கள் :

மஞ்சூர்: நீலகிரி மாவட்டத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மாற்று வழியாக மஞ்சூர் - கெத்தை சாலை உள்ளது. இந்த சாலையின் நடுவே நேற்று முன்தினம் மாலை குட்டிகளுடன், காட்டு யானைகள் நீண்டநேரம் நின்று கொண்டிருந்தன. அப்போது, அவ்வழியாக வந்த தேயிலை, மலைத் தோட்ட காய்கறிப் பணிக்கு வந்தவர்கள் சாலையிலேயே சுமார் ஒரு மணி நேரம் வரை காத்திருந்தனர். யானைகள் கூட்டம் அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்ற பின்னர் தொழிலாளர்கள் சென்றனர்.

மஞ்சூர் - கெத்தை சாலையில் தற்போது வாகன நடமாட்டம் குறைந்துள்ளதாலும், பலாப் பழம் உட்பட பல்வேறு பழங்களின் சீசன் என்பதாலும் யானைகள் அடிக்கடி சாலையில் முகாமிட்டு வருகின்றன. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x