Published : 10 Jun 2021 03:12 AM
Last Updated : 10 Jun 2021 03:12 AM

உதகையில் காவல்துறையினரின் கரோனா தொற்று விழிப்புணர்வு பிரச்சாரம் :

உதகை:தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதை அடுத்து கடந்த மாதம் 10-ம் தேதி முதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் 24-ம்தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நீலகிரி உட்பட 11 மாவட்டங்களில் தொற்று குறையாததால் வரும் 14-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், தனிக்கடைகளை திறக்க அரசு அனுமதித்ததால், நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கடைகள் திறக்கப்பட்டன. இதனால், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. போக்குவரத்து அதிகரித்ததால், உதகை காபி ஹவுஸ் சதுக்கத்தில் கூடுதல் எஸ்பி ஜனார்தனன் தலைமையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவசியம் இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி, வழக்கு பதிவு செய்தனர். ஒலிபெருக்கி மூலம், மக்கள் ஊரடங்கை மீறி வெளியில் சுற்ற வேண்டாம் என எச்சரித்தனர்.உதகை மார்க்கெட், பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் போலீஸார் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x