Published : 10 Jun 2021 03:12 AM
Last Updated : 10 Jun 2021 03:12 AM

புதுவை எல்லைப் பகுதி மதுக்கடைகளில் கலால்துறையினர் ஆய்வு :

புதுச்சேரி

புதுச்சேரியில் ஊரடங்கில் தளர்வுஅதிகளவில் அறிவிக்கப்பட்டு மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடைகள் திறக்கப் படாததால் எல்லைப்பகுதி மதுக் கடைகளில் கூட்டம் அதிகளவில் இருந்தது. இந்நிலையில் கலால்துறை துணை ஆணையர் சுதாகர் தலைமையில் அத்துறை அதிகாரிகள் ரெட்டியார்பாளையம், வழுதாவூர் சாலை, வில்லியனூர் உட்பட எல்லைப்பகுதி மதுக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். மதுபானங்கள் வீடு தேடி வரும் திட்டம் தொடர்பாக கலால்துறை துணை ஆணையர் சுதாகர் கூறுகையில், "அதிகளவில் கும்பல் கூடுவதை தவிர்க்க இத்திட்டத்தை செயல்படுத்த அரசு கலால்துறைக்கு பரிந்துரைத்துள்ளது. இது ஆலோசனையில் உள்ளது. சட்டத் திட்டங்கள் வகுத்தே அமல்படுத்த முடியும். அதனால், இதுவரை இத்திட்டம் அமலாகவில்லை" என்று குறிப்பிட்டார். ஊரடங்கு தளர்வில்பேருந்துகள் இயங்க புதுச்சேரியில் அனுமதி தரப்பட்டிருந்தது. இரண்டாம் நாளாக தனியார் பேருந்துகள் முழுமையாக இயங்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x