Published : 10 Jun 2021 03:13 AM
Last Updated : 10 Jun 2021 03:13 AM
கண்டமனூரில் ஆட்டோ ஸ்டாண்ட் அகற்றப்பட்டதைக் கண்டித்து ஓட்டுநர்கள் குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் கண்டமனூரில் ஊராட்சிக்குச் சொந்தமான இடத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் செயல்பட்டு வந்தது. இதை நேற்று முன்தினம் இரவு கண்டமனூர் ஊராட்சி நிர்வாகம் அகற்றியது. இதற்கு கண்டனம் தெரிவித்து ஆட்டோ ஓட்டுநர்கள் நேற்று குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வருசநாடு - தேனி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆண்டிபட்டி காவல் துணை கண்காணிப்பாளர் தங்க கிருஷ்ணன், வட்டாட்சியர் சந்திரசேகர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பகுதியில் சிமென்ட் சாலை அமைக்க உள்ளதால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அருகிலேயே ஆட்டோ ஸ்டாண்டுக்கு இடம் ஒதுக்கித் தரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஓட்டுநர்கள் கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT