Published : 10 Jun 2021 03:13 AM
Last Updated : 10 Jun 2021 03:13 AM

அஞ்சூர் அரசுப் பள்ளியில் திருட்டு :

அஞ்சூர் அரசுப் பள்ளியில் பொருட்களை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரைச் சேர்ந்தவர் லியோனி (55). இவர், பர்கூர் வட்டம் அஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 8-ம் தேதி பள்ளியில் தலைமை ஆசிரியர் அறையின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டதாக கிடைத்த தகவலை தொடர்ந்து லியோனி பள்ளிக்குச் சென்றார். அங்கு சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 3 புரொஜெக்டர்கள், ஆம்பிளிபயர், 2 தெர்மல் ஸ்கேனர், 3 ஆக்சி மீட்டர் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது தெரிந்தது. இதுதொடர்பாக கந்திகுப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x