Published : 10 Jun 2021 03:13 AM
Last Updated : 10 Jun 2021 03:13 AM
கோவில்பட்டி முத்து நகரைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(44). இவர், திருநெல் வேலியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார். இவரிடம் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த அய்யனார் மனைவி பேச்சியம்மாள் என்பவர், ஜோதிடம் பார்த்துள்ளார். அப்போது, தங்க நகையை வைத்து பரிகாரம் செய்ய வேண்டும், என முத்துராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பேச்சியம்மாள் வீட்டில் 7 பவுன் தங்க நகையை வைத்து, மே 7-ம் தேதி இரவு முத்துராமலிங்கம் பூஜை செய்துள்ளார்.
இதேபோல, பேச்சியம்மாள் வீட்டின் அருகே வசிக்கும் மாரியம்மாள் என்பவரின் வீட்டில் ஜூன் 1-ம் தேதி அரை பவுன் தங்க நகையை வைத்து முத்துராமலிங்கம் பரிகார பூஜை செய்துள்ளார். இந்த நகைகள் மாயமாகின. கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, முத்துராமலிங்கத்தை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT