Published : 10 Jun 2021 03:14 AM
Last Updated : 10 Jun 2021 03:14 AM

வந்தவாசியில் கரோனா தொற்றால் உயிரிழந்த - மூதாட்டி உடலை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள் :

வந்தவாசி அருகே கரோனா தொற்றால் இறந்த மூதாட்டியின் உடலை இந்து முறைப்படி இஸ்லாமியர்கள் அடக்கம் செய்தனர்.

தி.மலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் வடமலை. இவரது மனைவி தனகோட்டியம்மாள் (75). இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிலே தங்கியிருந்தார். பின்னர், அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், தொற்று உறுதியான நிலையில், நேற்று காலை அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதற்குள் அவர் உயிரிழந்தார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தனகோட்டி யம்மாளின் உடலுக்கு அருகில் செல்ல அச்சப்பட்டனர்.

இதையடுத்து, தமுமுக நிர்வாகிகள் ஹைதர் அலி, அக்பர், யூசுப் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மன்ற நிர்வாகிகள் அப்பாஸ் அலி, ரியாஸ் உள்ளிட்டோர் முழு கவச உடை அணிந்து தனகோட்டியம்மாளின் உடலில் இருந்த நகைகளை கழற்றி உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

பின்னர், மயானத்தில் இந்து முறைப்படி அவரது உடலை அடக்கம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x