Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் - கரோனாவுக்கு மேலும் 21 பேர் உயிரிழப்பு :

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 443 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 38,480 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 649 பேர் உட்பட இதுவரை 33,665 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4,530 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 8 பேர் உயிரிழந்தனர். இறப்பு எண்ணிக்கை 295 ஆக உயர்ந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 463 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 53,029 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 516 பேர் உட்பட இதுவரை 47,533 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4,246 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 9 பேர் உயிரிழந்தனர். இறப்பு எண்ணிக்கை 602 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 270 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 23,539ஆக உயர்ந்துள்ளது. நேற்று 4 பேர் உயிரிழந்தனர். இறப்பு எண்ணிக்கை 155 ஆக உயர்ந் துள்ளது.

3 மாவட்டங்களிலும் ஒரே நாளில் 1,176 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x