பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது தனி கவனம் : திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரி பேட்டி

விஜயகுமாரி
விஜயகுமாரி
Updated on
1 min read

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரி தெரிவித்தார்.

திண்டுக்கல்லில், அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: சட்டம், ஒழுங்குப் பிரச்சினையில் முழுக் கவனம் செலுத்தப்படும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புகார்கள் மீது தனி கவனம் செலுத்தப்பட்டு, தவறு இழைத்தவர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கிராமம், மலைப் பிரதேசங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகளவில் நடப்பதாகத் தகவல் வருகிறது. இவற்றைக் கண்காணித்து தடுக்கவும், குழந்தைகள் நல அலுவலர்களுடன் இணைந்து பெற்றோருக்குப் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மகளிர் போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் திண்டுக்கல் மற்றும் தேனி போலீஸார் முழுமையாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சிறப்பாக பணிபுரிந்தனர் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in