Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு :

தருமபுரி

பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் வழியாக காவிரியாறு ஓடுகிறது. இங்கு, கடந்த 6-ம் தேதி விநாடிக்கு 800 கன அடி வீதம் நீர்வரத்து இருந்தது. நேற்று முன் தினம் இது விநாடிக்கு 1500 கன அடியாக அதிகரித்தது.

இந்நிலையில், நேற்று மீண்டும் நீர்வரத்து அளவு சற்றே அதி கரித்தது. நேற்று காலை அளவீட்டு நிலவரப்படி விநாடிக்கு 2000 கன அடி என்ற அளவில் ஒகேனக்கல் காவிரியாற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x