புஞ்சை புகழூர் பேரூராட்சியில் -  முறையாக ஊதியம் வழங்கக் கோரி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் :

புஞ்சை புகழூர் பேரூராட்சியில் - முறையாக ஊதியம் வழங்கக் கோரி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் :

Published on

கரூர் மாவட்டம் புஞ்சை புகழூர் பேரூராட்சியில் முறையாக ஊதியம் வழங்கக் கோரி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் நேற்று பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புஞ்சை புகழூர் பேரூராட்சியில் 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் ஒப்பந்ததாரர்களிடம் முன்பணம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் வாங்கிய முன்பணத்துக்கு, அசல் தொகையுடன் வட்டியையும் பிடித்துக் கொண்டு ஒப்பந்ததாரர்கள் நேற்று ஊதியம் வழங்கியுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள், நேற்று பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஒப்பந்ததாரர்கள் இனி முறையாக ஊதியம் வழங்கப்படும் என உறுதியளித்ததையடுத்து ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு திரும்பினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in