Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

கீழப்பழுவூர் அருகே லாரி மோதி அக்கா, தம்பி உயிரிழப்பு :

அரியலூர்: பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் தோப்புத்தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சர்மிளா(26). இவர், திருச்சி மாவட்டம் கல்லகம் கிராமத்தில் உள்ள தனது தந்தை ஞானமூர்த்தி வீட்டுக்கு வந்திருந்தார். இந்நிலையில், சர்மிளா, நேற்று தனது தம்பி மாதவனை(23) அழைத்துக்கொண்டு திருமானூரை அடுத்துள்ள கீழகொளத்தூர் கிராமத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு நேற்று மதியம் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

கீழப்பழுவூர் அருகே தஞ்சை- அரியலூர் சாலையில் வந்தபோது எதிரே வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த கீழப்பழுவூர் போலீஸார் இருவரது உடல்களையும் மீட்டு அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x