Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

பழங்குடியின மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த வழக்கு : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மதுரை

தமிழகத்தில் பழங்குடியின மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தக் கோரி தாக்கலான மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த எழில் ஓவியா, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

கரோனா பரவலால் தமிழகத்தில் 225 பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் மூடப்பட்டன.

பழங்குடியின மாணவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் போதிய வசதி இல்லாததால் அவர்களின் கல்வி கேள்விக் குறியாகியுள்ளது. பழங்குடியினர் பகுதியில் யாராவது ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கு போதிய வசதியில்லை.

எனவே, பழங்குடியினர் வசிக்கும் இடங்களில் அவர்களுக்கு உணவு வழங்குவதற்காக சமுதாய சமையலறை ஏற்படுத்தவும், மாணவர்கள் படிக்க ஆன்லைன் வகுப்புகள் நடத்தவும், கரோனா தொற்றாளர்களை தனிமைப்படுத்த வனப்பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் சிகிச்சை மையம் அமைக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்து மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 18-க்கு ஒத்திவைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x