Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

தெருவிளக்கு வசதி செய்து தரக் கோரிகுளித்தலை நகராட்சி ஆணையரிடம் மனு :

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி ஆணையர் முத்துகுமாரிடம், குளித்தலை சமூக ஆர்வலர்கள் அமைப்பு மற்றும் கரூர் மாவட்ட சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பது:

குளித்தலை நகராட்சி அலுவலக நுழைவாயிலில் இருந்த 'தமிழ் வாழ்க' என்ற பெயர்ப் பலகை அகற்றப்பட்டு, நகராட்சி அலுவலகத்தில் ஓரமாகக் கிடக்கிறது. இந்தப் பெயர்ப் பலகையை மீண்டும் நகராட்சி அலுவலக நுழைவாயிலில் பொருத்தி, செம்மொழியான தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்க வேண்டும். மேலும், மணப்பாறை சாலையில் ரயில்வே கேட் அருகே தற்போது ஏராளமான குடியிருப்புகள் உருவாகிவிட்டன. ஆனால், இங்கு தெருவிளக்குகள் எதுவும் இதுவரை பொருத்தப்படவில்லை. எனவே, இப்பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x