Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM

துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை :

அரியலூர்: தமிழக முதல்வருக்கு அனுப்புவதற்காக, அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பூங்கோதையிடம், ஏஐடியுசி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் தண்டபாணி தலைமையில் அச்சங்கத்தினர் நேற்று முன்தினம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பது: அரசு மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து, கரோனா கால ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதேபோல, உள்ளாட்சித் துறையில் முன்களப்பணியில் ஈடுபட்டு வரும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், சுயஉதவிக் குழு பணியாளர்கள், கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மைக் காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கரோனா கால ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, ஏஐடியுசி சங்க நிர்வாகிகள் எஸ்.மாரியப்பன், சிவஞானம் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x