Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கால்நடைகளிலிருந்து மனிதர்களுக்கு கரோனா பரவ வாய்ப்பு இல்லை. எனவே, கால்நடைகளால் கரோனா பரவும் அபாயம் குறித்து பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்.
கால்நடைகளை பராமரிக்கும் கொட்டகையை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புல் உள்ளிட்ட செடிகளை அகற்றி சுத்தம் செய்து கொசுக்களின் உற்பத்தியை தடுக்க வேண்டும். கிருமிநாசினி கொண்டு தொழுவத்தை தினம் ஒருமுறையாவது கழுவி, காற்றோட்டமாக உலர்ந்த நிலையில் கொட்டகைகளை பராமரிக்க வேண்டும்.
மேலும், ஏதாவது நோய் அறிகுறி அல்லது ஏதேனும் கால்நடை மருத்துவ உதவி தேவைப்பட்டால் அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவரை அணுகலாம் அல்லது 9443722333, 9445001205 ஆகிய செல்போன் எண்களை தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT