Published : 09 Jun 2021 03:17 AM
Last Updated : 09 Jun 2021 03:17 AM
மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் கருவறையில் கடந்த 2-ம் தேதி தீவிபத்து ஏற்பட்டது. இக்கோயிலில் குமரி மாவட்ட திருக்கோயில்களின் நிர்வாக கூடுதல் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள விஷ்ணுசந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அவர் தீவிபத்து நடந்த கருவறையின் மேற்கூரையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தற்காலிக கூரை அமைக்கும் பணியை விரைந்து முடிக்குமாறு வலியுறுத்தினார்.
ஆய்வின்போது அவரிடம், இந்து முன்னணி கோட்டச் செயலாளர் மிஷாசோமன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. அதில், `மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் கேரள நம்பூதிரியைக் கொண்டு தேவபிரசன்னம் பார்த்து பரிகார பூஜை நடத்த வேண்டும். பழமை மாறாமல் கோயிலை சீரமைத்து கலஸாபிஷேகம் செய்து பூஜைகள் நடத்த வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT