Published : 08 Jun 2021 03:14 AM
Last Updated : 08 Jun 2021 03:14 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.2 கோடி கரோனா நிவாரண நிதி :

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வரின் வேண்டுகோளின்படி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு பொதுத்துறை நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிவோர் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடைகள் வழங்கிடுமாறு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வணிகர்கள், அரசு மற்றும் தனியார் துறைகளில் பணி புரிவோர், சுயதொழில் செய்வோர், பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட 71 நபர்கள் ரூ.2,06,45,961 வங்கிகாசோலை, வரைவோலை மற்றும் பணமாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக கொடுத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x