Published : 08 Jun 2021 03:14 AM
Last Updated : 08 Jun 2021 03:14 AM

கயத்தாறில் கஞ்சா விற்ற 3 பேர் கைது :

கோவில்பட்டி: கயத்தாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் மற்றும் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மயான சாலை ரோட்டில் உள்ள கோயில் அருகே சந்தேகப்படும்படியாக நின்ற 3 பேரை பிடித்து, அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர்கள் திருநெல்வேலி வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் வெங்கடேசன் (21), அழகு பாண்டி மகன் அய்யாத்துரை (19), பரமசிவன் மகன் வைகுண்டராமன் (21) என தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்து, 1.5 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x