Published : 08 Jun 2021 03:14 AM
Last Updated : 08 Jun 2021 03:14 AM
கோவில்பட்டி: கரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கிய திருவிழாக்களை அரசிடம் அனுமதி பெற்று பக்தர்கள் பங்கேற்பின்றி நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு கோயிலில் கொடை விழா கடந்த செவ்வாய்கிழமை நடந்துள்ளது. விழாவில், இளைஞர்களுக்கான போட்டிகளும் நடத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, ‘‘திருவிழா நடப்பது குறித்து தகவல் கிடைத்தவுடன் அங்கு சென்று, மக்களிடம் அறிவுறுத்தி கலைந்து போகச் செய்தோம்’’ என தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT