

கரோனா தடுப்பூசிக்கு கடந்த 4 நாட்களாக நீடிக்கும்கடும் தட்டுப்பாடு காரணமாக, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
கரோனா வைரஸ் தொற்றுவராமல் இருக்க தடுப்பூசி மட்டுமே ஒரே பேராயுதமாக இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. அரசு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், சிறப்பு முகாம்களும் நடைபெற்றன.
இதனால், தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஒருவாரமாக போதுமான தடுப்பூசிகள் இல்லாததால், பொதுமக்களை சுகாதாரத்துறையினர் திருப்பி அனுப்புகின்றனர்.
ஒரு சில மையங்களில் மறுநாளைக்கு வருமாறு கூறி டோக்கன் வழங்கினர். அவ்வாறு டோக்கன் பெற்றவர்களுக்கும், அடுத்த நாள் தடுப்பூசி போடமுடியாத அளவுக்கு தட்டுப்பாடு நிலவியது.
திருநெல்வேலி
கன்னியாகுமரி
மருத்துவமனைகள் மற்றும் தடுப்பூசி முகாம்களில் தினமும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதும், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதும் தொடர்கிறது. நேற்று முன்தினம் 1,000 கோவேக்சின் தடுப்பூசிகள் வந்தன. இவை நாகர்கோவில் இந்து கல்லூரியில் நடந்த சிறப்பு முகாமில் டோக்கன் வழங்கப்பட்டு போடப்பட்டன. பல மணி நேரமாக வரிசையில் காத்து நின்றவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். மாவட்டத்தில் இதுவரை முதல் கட்ட தடுப்பூசி 1,60,450 பேருக்கும், இரண்டாம் கட்ட தடுப்பூசி 46,429 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தடுப்பூசி மையங்களுக்கு ஆர்வமுடன் வரும் மக்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். பல மையங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்களும் கடந்த சில நாட்களாக நடத்தப்படவில்லை.
மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் கூறும்போது, ``500 தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. 2-வது டோஸ் போடுவோருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. ஓரிரு நாட்களில் தடுப்பூசிகள் வந்துவிடும்” என்றார் அவர்.
கோவில்பட்டி சுகாதார மாவட்டத்துக்கு கடந்த 2-ம் தேதி 5,000 டோஸ் கோவிஷீல்டும், 1,000 டோஸ்கோவாக்சினும் ஒதுக்கப்பட்டிருந்தன. இவை மறுநாள் 3-ம் தேதிமக்களுக்கு செலுத்தப்பட்டு விட்டன. கடந்த 5-ம் தேதி கோவாக்சின் 500 டோஸ்கள் ஒதுக்கப்பட்டன. அவையும் பிரித்து வழங்கப்பட்டுவிட்டன. அடுத்த ஒதுக்கீடு வந்தவுடன், பதிவு செய்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என, சுகாதாரத்துறையின் தெரிவித்தனர்.
தென்காசி