Published : 08 Jun 2021 03:15 AM
Last Updated : 08 Jun 2021 03:15 AM

ரயிலில் மதுபானம் கடத்திய இருவர் கைது :

ஜோலார்பேட்டை: ரயில் மூலம் வெளிமாநில மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 பேரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர்.

ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் 2 மற்றும் 3-வது நடைமேடையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடகா மாநிலத்தில் இருந்து சென்னை வரை செல்லும் அதி விரைவு ரயில் அங்கு வந்தது. அதிலிருந்து இறங்கிய 2 பேரை மடக்கி விசாரித்தபோது அவர்கள், வேலூர் மாவட்டம் பல்லகொல்லை பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (25) என்பதும் மற்றொருவர் பெங்களூருவைச் சேர்ந்த பிரபு (37) என்பதும் தெரியவந்தது. மேலும், 2 பேரும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை ரயில் மூலம் கடத்தி வந்து வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து, ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25 லிட்டர் மதுபாட்டில் களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x