Published : 07 Jun 2021 03:14 AM
Last Updated : 07 Jun 2021 03:14 AM

பட்டிவீரன்பட்டி அருகே தந்தையைஅடித்துக் கொன்ற 2 மகன்கள் கைது :

தாயின் அலறல் சத்தம் கேட்டு அருகில் குடியிருக்கும் மகன்கள் முத்துச்சாமி (35), ஊர்காலன் (30) ஆகியோர் வந்து தந்தையை கட்டையால் தாக்கினர். இதில் வனராஜ் படுகாயமடைந்தார். இருவரையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட வனராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து முத்துச்சாமி, ஊர்காலன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x