Published : 07 Jun 2021 03:14 AM
Last Updated : 07 Jun 2021 03:14 AM
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரியானா, நமீதா, உமா, பர்வீன், மாயா, ஸ்டெபி. திருநங்கையர்களான இவர்கள் 6 பேரும், ஆதரவற்ற, வீடில்லாமல் சாலையோரத்தில் வசிக்கும் 150 பேருக்கு, கரோனா ஊரடங்கையொட்டி, நாள்தோறும் உணவு வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து ரியானா கூறியது: எங்களைப் பார்த்து சாப்பிட்டாயா என்று கேட்பவர்கள் மிகவும் சொற்பம். ஆதரவற்ற நிலையில் சாலைகளில் சுற்றித்திரிவோரின் நிலை மிகவும் பரிதாபமானது. வழக்கமான நாட்களில் அவர் களுக்கு எப்படியாவது உணவு கிடைத்துவிடும். ஆனால், தளர் வற்ற ஊரடங்கு நாட்களில் உணவு கிடைப்பது மிகவும் கஷ்டம். இதற்கு, எங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசித்து, கடந்தாண்டு ஊரடங்கின்போது உணவு வழங்கும் பணியைத் தொடங்கினோம்.
தொடர்ந்து, நிகழாண்டும் முழு ஊரடங்கு தொடங்கிய முதல்நாளில் இருந்தே உணவு வழங்கி வருகிறோம். 6 பேரும் ஒருங்கிணைந்து சமைத்து வாகனத்தில் எடுத்துச் சென்று, உணவு கிடைக்காதவர்களைக் கண்டறிந்து தினமும் வழங்கி வருகிறோம். சொந்த செலவு மற்றும் எனது முகநூல் நண்பர்கள் செய்யும் உதவியுடன் நாங்கள் உணவு வழங்கி வருகிறோம். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு உரிய அனுமதி பெற்று அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு பாதாம் பால், ரொட்டி வழங்கவுள்ளோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT