Published : 06 Jun 2021 03:13 AM
Last Updated : 06 Jun 2021 03:13 AM

கடலூர், விழுப்புரத்தில் கரோனாவுக்கு 18 பேர் உயிரிழப்பு :

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 471பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் களைச் சேர்த்து இதுவரையில் 37,226பேருக்கு தொற்று ஏற் பட்டுள்ளது. நேற்று 575பேர் குண மடைந்தனர். இதுவரையில் 32,077 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4,873பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று 3பேர் உயிரிழந்தனர். இதுவரையில் 276 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 590பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரையில் 51,523 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 574 பேர் குணமடைந்தனர். இதுவரையில் 45,663 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4,519 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 576 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 226 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் 22,688 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 144 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x