Published : 05 Jun 2021 03:12 AM
Last Updated : 05 Jun 2021 03:12 AM

காஞ்சிபுரத்தில் புதிய டிஐஜி பொறுப்பேற்பு :

காஞ்சிபுரம் சரகத்தின் புதிய டிஐஜியாக எம்.சத்யபிரியா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் சென்னை காவலர் பயிற்சி கல்லூரி யின் காவல் சரக துணைத் தலைவராக (பயிற்சி) இருந்து தற்போது காஞ்சிபுரம் சரக துணைத் தலைவராக மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெ.சண்முகப்பிரியா மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் சரக அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கு முன் காஞ்சிபுரம் சரக துணைத் தலைவராக இருந்த சாமுண்டீஸ்வரி சென்னை காவல் துறை தலைமையகத்தின் இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x