கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கரோனாவுக்கு 21 பேர் உயிரிழப்பு :

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கரோனாவுக்கு  21 பேர் உயிரிழப்பு :
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 521 பேருக்கு புதிதாககரோனா தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது. இவர்களைச் சேர்த்து இதுவரையில் 36,755 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 8பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் 270 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று 683பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தற்போது 4,983பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்றுபுதிதாக 488 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது. இவர்களைச் சேர்த்து இதுவரையில் 50,932 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தத்தில், இதுவரையில் 561 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 243 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 22,462 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்தார். இதுவரை 144 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in