

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே குடும்பத் தகராறு கார ணமாக இரு குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொலை செய்து விட்டு தாயும் தற்கொலை செய்துகொண்டார்.
சாத்தூர் அருகே உள்ள ஓ.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன் (31). கூலித் தொழிலாளி. இவரது மனைவி செல்வி (26). இவர்களுக்கு மகள் அனுஷ்கா (5), மகன் மாதேஸ் (3) இருந்தனர். குடும்பத் தகராறு காரணமாக, கடந்த 20.11.2020 அன்று சங்கரநாராயணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அதன்பின், தனது அண்ணன் மகேந்திரன் பராமரிப்பில் செல்வி யும் அவரது குழந்தைகளும் இருந்து வந்தனர். கணவர் இறந்ததால் செல்வி மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள் ளார். இந்நிலையில், ஓ.மேட்டுப் பட்டியில் பொன்னுப்பாண்டி என்ப வருக்குச் சொந்தமான கிணற்றில் தனது இரு குழந்தைகளையும் தள்ளிவிட்டுக் கொலைசெய்து செல்வியும் கிணற்றில் விழுந்து நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சாத்தூர் தீணைப்பு நிலையத்துக்கும், சாத்தூர் தாலுகா போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து செல்வி, அவரது 2 குழந்தைகளின் உடல்களையும் மீட்டனர். மேலும் சாத்தூர் போலீ ஸார் விசாரித்து வருகின்றனர்.