

தூத்துக்குடி: கோவில்பட்டி சிந்தாமணி நகரைச் சேர்ந்தவர் வேலு மகன் முத்துப்பாண்டி (48). இவரை கடந்த 04.05.2021 அன்று கொலை வழக்கு தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் முத்துப்பாண்டியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உத்தரவிட்டார். அதன் பேரில் முத்துபாண்டி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.