Published : 05 Jun 2021 03:14 AM
Last Updated : 05 Jun 2021 03:14 AM

மத்திய மண்டலத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்த 4,762 பேர் டிஸ்சார்ஜ் :

திருச்சி: திருச்சியில் 689 பேர், தஞ்சாவூரில் 1,004 பேர், திருவாரூரில் 576 பேர், நாகை, மயிலாடுதுறையில் 516 பேர், கரூரில் 337 பேர், புதுக்கோட்டையில் 288 பேர், பெரம்பலூரில் 209 பேர், அரியலூரில் 246 பேர் என மத்திய மண்டலத்தில் மொத்தம் 3,865 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சியில் 709, கரூரில் 409, திருவாரூரில் 579, தஞ்சாவூரில் 1075, நாகை, மயிலாடுதுறையில் 828, புதுக்கோட்டையில் 540, பெரம்பலூரில் 298, அரியலூரில் 324 என 4,762 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், அரியலூரில் 5, கரூரில் 8, திருச்சியில் 15, நாகை, மயிலாடுதுறையில் 13, புதுக்கோட்டையில் 7, தஞ்சாவூரில் 2, திருவாரூரில் 5 என 55 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெறப்பட்ட 1,065 பரிசோதனை முடிவுகளில் புதிதாக 121 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 13,039 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,227 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 138 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,481 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர். கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் நேற்று உயிரிழந்தனர். மாவட்டத்தில் இதுவரை 193 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x